அட கிராம்பு சாப்பிட இவளோ நல்லதா!!

Food 'DO' Healthy




·         நாம் சாப்பிடும்  உணவை செரிமானம் செய்வதற்கு  கிராம்பு ரெம்ப உதவிய இருக்கும்  நாம்  கடினமான உணவை உண்ணும்போது கூட இது எளிமையாக   செரிமானம் செய்துவிடும்.

·         மேலும் வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது அதனாலே அசைவ உணவுகளில் கிராம்பு சேர்க்க படுகிறது. இதற்கு வாசனை தர கூடிய குணமும் இருக்கிறது எனவே உணவு பொருட்களில் கிராம்பு சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

·         இத்தகைய கிராம்பை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடிப்பதனால் உண்டாகும் நன்மைகளை பார்க்கலாம்.

கிராம்பு நீர் செய்முறை:

·         ஒரு பாத்திரத்தில் ஒரு குடுவை அளவு தண்ணீரை எடுத்து அதில் 4 கிராம்பை நன்கு நசுக்கிப்போட்டு நன்கு கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதிக்கவும் தண்ணீரின் நிறம் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும் அதுவரை கொதிக்க விடவேண்டும். பின்பு அதை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்கவேண்டும். இதனுடன் எதையும் சேர்க்கத்தேவையில்லை

·         காலை உணவு அருந்திய பின்பு 30  நிமிடம் கழித்து குடிக்கலாம். இதனை வாரத்தில் 3 நாட்கள் குடித்தால் கூட போதுமானது.

பலன்கள்:

·         சளி இருமல் ஜலதோஷம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலநேரங்களுக்கு தலைவலியும் வரக்கூடும் அப்படி தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கிராம்புநீரை குடிக்கலாம்.

·         உயர் இரத்தஅழுத்த பிரச்சனை மற்றும் சீரற்ற இரத்த ஓட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த கிராம்பு நீர் மிகவும் நல்லது

·         இதயத்தில் சிறிய பாதிப்பு வந்தவர்கள் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்

·         சிலருக்கு செரிமான பிரச்சனை இருக்கும் அவர்களுக்கு இந்த கிராம்பு நீர் மிகவும் நல்லது அந்த செரிமான பிரச்னையை குணப்படுத்தும் தன்மை கொண்டது இந்த கிராம்பு.




·         பற்களின் ஆரோக்கியத்திற்கு இந்த கிராம்பு பெரிதும் உதவுகிறது. பல்வலி உள்ளவர்கள் இந்த கிராம்பை எடுத்து பல் இடுக்கில் வைத்தால் போதும் வலி சிறிதுநேரத்தில் குணமாகும்.

·         மேலும் கல்லிரலை பலமாக்கவும் கணையம் நன்கு செயல்படவும் இது உதவுகிறது.

·         உடல் சோம்பலை போக்கி சுறுசுறுப்பாக வைக்கிறது.

·         இரத்தத்தில் வெள்ளையணுக்கள் உற்பத்தியை அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொற்று கிருமிகள் ஏதும் பாதிக்காத அளவுக்கு நமது உடலை பாதுகாக்கும்.

·         கிராம்பில் உள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

கிராம்பை அளவுக்கு அதிகமா உபயோகிப்பதால் வரும் விளைவுகள்?

·         அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு அதுபோலவே கிராம்பை அளவோட பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் குமட்டல், வாந்தி, சுவாச பிரச்சனை, தொண்டைகளில் புண் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.




·         இன்னும் சிலபேருக்கு அலர்ஜி வரவும் வாய்ப்புள்ளது. அரிப்பு, வீக்கம், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளும் வர வாய்ப்புள்ளது.

கிராம்பை யாரெல்லாம் உபயோகிக்க கூடாது?

·         அறுவை சிகிச்சை மேற்கொள்ள போறவுங்க கிராம்பை சாப்பிடக்கூடாது, மேலும் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கவுங்க கிராம்பை சாப்பிடக்கூடாது ஏனென்றால் இது அந்த சர்க்கரை அளவை மேலும் குறைத்து விடும் பின்பு மயக்கம் போன்றவை வரக்கூடும்.


Post a Comment

0 Comments